சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சாலை கட்டமைப்புத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு : ஆஸ்திரியாவுடன் ஒப்பந்தம்

Posted On: 09 DEC 2020 6:27PM by PIB Chennai

சாலை கட்டமைப்புத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக ஆஸ்திரியாவின் புத்தாக்க மற்றும் தொழில்நுட்பத் துறையுடன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

சாலைப் போக்குவரத்துத் துறையில், வலுவான இருதரப்பு ஒத்துழைப்பை உருவாக்குவதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

எலக்ட்ரானிக் சுங்கச் சாவடி, சுரங்கப் பாதை கண்காணிப்பு முறை, புவி வரைபட கண்காணிப்பு, நிலச்சரிவு பாதுகாப்பு நடவடிக்கை என நவீன தொழில்நுட்பங்கள் ஆஸ்திரியாவிடம் உள்ளது.

சாலைப் போக்குவரத்துத் துறையில், இந்தியா-ஆஸ்திரியா இடையேயான ஒத்துழைப்பானது இருதரப்பு சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த உதவும்.

இந்த ஒப்பந்தத்தில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் திரு கே.சி.குப்தா,  ஆஸ்திரிய தூதர் பிரிஜிட் ஒபின்செர்-வால்ச்சோபர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679441

-----



(Release ID: 1679484) Visitor Counter : 138