இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

பிரிக்ஸ் இளைஞர்கள் உச்சி மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, இந்திய இளம் தன்னார்வலர்களின் கொவிட் சேவைகளை புகழ்ந்தார்

Posted On: 02 DEC 2020 5:39PM by PIB Chennai

ஆறாவது பிரிக்ஸ் இளைஞர்கள் உச்சி மாநாட்டிலும், பிரிக்ஸ் அமைச்சர்களின் கூட்டத்திலும், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு செவ்வாய் அன்று காணொலி மூலம் கலந்து கொண்டார்.

தற்போதைய கொரோனாவைரஸ் பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதில், உலகெங்கிலும் உள்ள இளைஞர்களின் பங்களிப்பைப் பற்றி உச்சி மாநாட்டில் தான் ஆற்றிய உரையின் போது திரு ரிஜிஜு எடுத்துரைத்தார்.

இந்தியாவை உதாரணமாகக் காட்டி பேசிய அவர், 10 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் கொரோனா தொடர்பான சேவைகளை நாடு முழுவதும் ஆற்றியதாக பெருமையுடன் கூறினார்.

நேரு யுவகேந்திரா, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் சாரணர் இயக்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இந்தியாவின் கொரோனா போரில் முன்களத்தில் நின்றதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் பொது லட்சியங்களை நோக்கி இன்னும் அதிகமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று திரு ரிஜிஜு கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677701

**********************



(Release ID: 1677765) Visitor Counter : 168