விவசாயத்துறை அமைச்சகம்

விவசாயிகளின் நலனை பாதுகாக்க உறுதியாக உள்ள அரசு, பேச்சுவார்த்தைக்கு எப்போதுமே தயாராக உள்ளது - திரு நரேந்திர சிங் தோமர்

Posted On: 01 DEC 2020 8:03PM by PIB Chennai

பஞ்சாபை சேர்ந்த விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளோடு, மத்திய வேளாண் மற்றும் விவசாய நலன் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம் அமைச்சர் திரு பியுஷ் கோயல் மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணை அமைச்சர் திரு சோம் பிரகாஷ் ஆகியோர் புது தில்லியில் உள்ள விக்யான் பவனில் 2020 டிசம்பர் 1 அன்று உரையாடினார்.

வேளாண் சீர்திருத்த சட்டங்களின் பலன்கள் குறித்து விவசாய சங்கங்களுக்கு  அமைச்சர்கள் மீண்டும் விளக்கினார்கள். வேளாண் சீர்திருத்த சட்டங்கள் குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து சுமூகமான சூழ்நிலையில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பஞ்சாபை சேர்ந்த விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளை அன்புடன் வரவேற்ற வேளாண் அமைச்சர்விவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளதென்றும், பேச்சுவார்த்தைக்கு எப்போதுமே தயாராக உள்ளதென்றும் தெரிவித்தார்.

வேளாண் துறையின் வளர்ச்சி எப்போதுமே இந்திய அரசின் முக்கிய முன்னுரிமையாக இருந்திருக்கிறது என்று அமைச்சர் கூறினார். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நிபுணர் குழுவொன்றை அமைக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்காக அரசோடு இன்னொரு கட்ட பேச்சுவார்த்தையில் அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677487

-----



(Release ID: 1677541) Visitor Counter : 167