சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
41வது நாளாக குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகம் மத்திய அரசு தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
13 NOV 2020 12:34PM by PIB Chennai
இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 41-வது நாளாக அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கு மிகவும் கீழே அதாவது 4,85,547 ஆக இருக்கிறது. இது போல தொடர்ந்து மூன்றாவது நாளாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழே பதிவாகி உள்ளது. மொத்த கொரோனா பாதிப்பில் இது 5.55% மட்டுமே.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 44,879 ஆக இருக்கும் நிலையில், இதற்கு மாறாக குணம் அடைவோரின் எண்ணிக்கை 49079 ஆக இருக்கிறது. தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையை விடவும் தினமும் குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு தொடர்ந்து 41 வது நாளாக நீடிக்கிறது.
மொத்த குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 81,15,580 ஆக இருக்கிறது. இதன் மூலம் குணம் அடைந்தோரின் விகிதமானது 92.97% ஆக இருக்கிறது. சிகிச்சைபெறுவோர் மற்றும் குணம் அடைந்தோர் எண்ணிக்கைக்கு இடையேயான வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து 76,31,033 ஆக இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 547 பேர் நோய்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில் 80 % வீதம்(79.34%) பேர் பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672562
**********************
(Release ID: 1672562)
(வெளியீட்டு அடையாள எண்: 1672656)
வருகையாளர் எண்ணிக்கை : 202
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam