நித்தி ஆயோக்

பள்ளி குழந்தைகளுக்காக இந்தியா-ரஷ்யா இணைந்து தொடங்கும் 3.0 புதுமைத் திட்டம்

Posted On: 07 NOV 2020 7:30PM by PIB Chennai

அடல் புதுமை இயக்கமும், ரஷ்யாவை சேர்ந்த சிரியஸ் (ரஷ்யா) அமைப்பும் இணைந்து எய்ம்-சிரியஸ் புதுமைத் திட்டம் 3.0-ஐ தொடங்கி உள்ளன.

இந்தியா, ரஷ்ய நாடுகளைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுக்காக இணைய வழியிலான இந்த 14 நாள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 7-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த திட்டத்தில் 48 மாணவர்கள், 16 கல்வியாளர்கள் மற்றும் வழிநடத்துபவர்கள், இணையப் பொருட்கள் மற்றும் கைபேசி செயலிகளை பல்வேறு துறைகள் எதிர்கொண்டுள்ள சர்வதேச சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் உருவாக்குவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671060

**********************



(Release ID: 1671137) Visitor Counter : 187