ஜல்சக்தி அமைச்சகம்

நாகாலாந்தில் ஜல் ஜீவன் இயக்கத்தின் செயல்படுத்தப்படுதல் குறித்த இடைக்கால ஆய்வு நடைபெற்றது

Posted On: 23 OCT 2020 5:25PM by PIB Chennai

ஜல்ஜீவன் இயக்கம் நாகாலாந்தில் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை குறித்து நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் தேசிய ஜல் ஜீவன் இயக்கக் குழுவினருக்கு இன்று எடுத்துக் கூறினார்கள்.

நாகாலாந்தில் ஜல் ஜீவன் இயக்கத்தின் செயல்படுத்தப்படுதல் குறித்த இடைக்கால ஆய்வு கூட்டத்தில் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த விளக்கம் மத்திய குழுவினருக்கு அளிக்கப்பட்டது.

நாகாலாந்தில் உள்ள 1,502 கிராமங்களில் 1,351-இல் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வளரத் துடிக்கும் மாவட்டமான கிபிரேவில் உள்ள 111 கிராமங்களில் 83-இல் (75 சதவீதம்) குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.

மேலும், அம்மாவட்டத்தில் உள்ள 15,845 வீடுகளில், 13,478-க்கு (85 சதவீதம்) குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. குறித்த காலத்தில் இலக்கை எட்டுவதற்காக இத்திட்டத்தின் செயல்படுத்துதல் வேகத்தை அதிகரிக்குமாறு மாநில அரசின் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

 

2024-ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் குழாய் இணைப்பை உறுதி செய்வதை ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல்ஜீவன் இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667058

----- 



(Release ID: 1667122) Visitor Counter : 136