மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

பஞ்சாபின் ரோபார் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து, நாட்டின் வளர்ச்சியில் மாணவர்கள் பங்கு பெற வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் வேண்டுகோள்

Posted On: 22 OCT 2020 5:49PM by PIB Chennai

நாட்டின் வளர்ச்சியில் தேசத்தின் போராளிகளான மாணவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' கேட்டுக்கொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் ரோபாரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தை இன்று திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்த பின் நிகழ்ச்சியில் பேசுகையில், அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ரோபார் இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்தியா மற்றும் உலக அளவில் உள்ள கல்வி நிறுவனங்களின் பல்வேறு துறைகளில் முதன்மையாக விளங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய கல்வி கொள்கை 2020 குறித்து பேசிய அவர், இந்தியா, தன்னிலை அடைவதை இந்த தேசிய கல்வி கொள்கை நிரூபிக்கும் என்றும் தற்சார்பு இந்தியா திட்டத்தின் இலக்கை அடையவும் இது ஏதுவாக இருக்கும் என்றும் கூறினார்.

தேசிய கல்வி கொள்கை 2020ன் உதவியோடு இந்தியாவை தலைசிறந்த கல்வி மையமாக உருவாக்கும் முயற்சியில் உலகெங்கும் உள்ள மாணவர்களை இந்தியாவின் பக்கம் ஈர்க்கும் வகையில் நம் நாட்டின் பாரம்பரியத்தை உலகறியச் செய்யும் முயற்சியில் தமது அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' மேலும் தெரிவித்தார்.

கொவிட்-19 பரவல் காலகட்டத்தில், மேக் இன் இந்தியா திட்டத்தை நோக்கி, பல்வேறு தொழில்நுட்பங்களை வடிவமைத்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கு அமைச்சர் தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666810

----



(Release ID: 1666856) Visitor Counter : 114