சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இ-சஞ்சீவனி தொலைதூர மருத்துவ சேவையை பயன்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் தொடர்ந்து முன்னிலை

Posted On: 12 OCT 2020 7:53PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் 
இ-சஞ்சீவனி தளத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் இதுவரை நாடு முழுவதும் வழங்கப்பட்டு உள்ளன. இதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இவற்றில் ஒரு லட்சம் ஆலோசனைகள் கடந்த 17 நாட்களில் அளிக்கப்பட்டுள்ளன. இ-சஞ்சீவனி வெளிநோயாளி பிரிவு தற்போது 216 ஆன்லைன் வெளிநோயாளர் பிரிவு சேவைகளை வழங்குகிறது.

தமிழ்நாட்டில் 169977 தொலைதூர ஆலோசனைகளும், உத்திரப் பிரதேசத்தில் 134992 தொலைதூர ஆலோசனைகளும் இ-சஞ்சீவனி தளத்தின் மூலம் நடைபெற்றுள்ளன.

கொவிட்-19 பெருந்தொற்றின் போது பயனாளிகளின் தனிநபர் இடைவெளியை உறுதி செய்து பல்வேறு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை இ-சஞ்சீவனி வழங்கியுள்ளது.

மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்குவதற்காக இந்த கைபேசி செயலியை 25- க்கும் அதிகமான மாநிலங்கள் பயன்படுத்தியுள்ளன.


மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663795

******

(Release ID: 1663795)



(Release ID: 1663935) Visitor Counter : 167