மத்திய அமைச்சரவை

ஸ்டாக்ஹோம் மாநாட்டில் பட்டியலிடப்பட்ட ஏழு உறுதியான இயற்கை மாசுபடுத்திகளை பரிசீலித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

प्रविष्टि तिथि: 07 OCT 2020 4:33PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டாக்ஹோம் மாநாட்டில் பட்டியலிடப்பட்ட ஏழு உறுதியான இயற்கை மாசுபடுத்திகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உறுதியான இயற்கை மாசுபடுத்திகள் குறித்த ஸ்டாக்ஹோம் மாநாட்டின் கீழ் ரசாயனங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு வெளியுறவு அமைச்சகத்துக்கும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்துக்கும் அமைச்சரவை அதிகாரம் வழங்கியது

          சுற்றுப்புற சூழலில் இருக்கும் ஆபத்து விளைவிக்கக்கூடிய ரசாயனங்களிடம் இருந்து உயிர்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதே ஸ்டாக்ஹோம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.

அமைச்சரவை இன்று அளித்துள்ள ஒப்புதல் சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் இந்தியாவுக்கு உள்ள உறுதியை காட்டுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662335

----- 


(रिलीज़ आईडी: 1662378) आगंतुक पटल : 381
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam