அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நெல்லின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக தடுப்பு மருந்து
Posted On:
04 OCT 2020 6:18PM by PIB Chennai
நெல்லுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் பயிர் நஷ்டத்தை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
நெற்பயிரை தாக்கி நோயை உண்டாக்கும் சூ (Xoo) என்னும் கிருமியை எதிர்கொள்ளக் கூடிய செயல்முறைகளை விஞ்ஞானி ஒருவரின் தலைமையிலான குழு வகுத்து வருகிறது.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆசிரியர்களுக்கான ஊக்கப் பரிசை வென்றவரான ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மையத்தில் பணிபுரியும் டாக்டர் தயி லாவண்யாவும் அவரது ஆய்வுக் குழுவும் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெற்பயிரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கிருமிகளின் தாக்குதலில் இருந்து அதை பாதுகாக்கும் தடுப்பு மருந்தை இவர்கள் உருவாக்கி வருகின்றனர்.
மேலும் தகவல்களுக்கு டாக்டர் தயி லாவண்யாவை tayi.lavanya3[at]gmail[dot]com என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அல்லது, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661596
****************
(Release ID: 1661620)