உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

தர்பங்காவில் இருந்து கிளம்பும் விமானங்களுக்கான முன்பதிவு இந்த மாத இறுதியில் தொடங்கும்: ஹர்தீப் சிங் புரி

Posted On: 12 SEP 2020 4:08PM by PIB Chennai

பீகாரில் உள்ள தர்பங்கா விமான நிலையத்தின் பணிகளை ஆய்வு செய்த மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் புரி, தர்பங்காவில் இருந்து கிளம்பும் விமானங்களுக்கான முன்பதிவு இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று கூறினார்.

சத் பூஜா புனித பண்டிகைக்கு முன் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து விமானப் போக்குவரத்து இங்கு தொடங்கும் என்று மேலும் அவர் கூறினார். வடக்கு பீகாரின் 22 மாவட்டங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தர்பங்கா விமான நிலையப் பணிகள் குறித்து திருப்தி தெரிவித்த அவர், கிட்டத்தட்ட அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன என்றார். உடான் திட்டத்தின் கீழ் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு இந்த வழித்தடம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் உள்ள தியோகர் விமான நிலையப் பணிகளையும் ஆய்வு செய்த திரு ஹர்தீப் சிங் புரி, பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் குறித்த காலத்துக்குள் நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653602



(Release ID: 1653626) Visitor Counter : 176