விவசாயத்துறை அமைச்சகம்
தென்னிந்தியாவின் முதல் மற்றும் நாட்டின் இரண்டாவது விவசாயிகள் ரயிலின் தொடக்க ஓட்டம் அனந்தப்பூர் மற்றும் புது தில்லிக்கிடையே துவக்கி வைக்கப்பட்டது
Posted On:
09 SEP 2020 2:41PM by PIB Chennai
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், திரு நரேந்திர சிங் தோமர் மற்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் திரு ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர், தென்னிந்தியாவின் முதல் மற்றும் நாட்டின் இரண்டாவது விவசாயிகள் ரயிலின் (கிசான் ரயில்) தொடக்க ஓட்டத்தை அனந்தப்பூர் மற்றும் புது தில்லிக்கிடையே காணொலி காட்சி மூலம் இன்று துவக்கி வைத்தனர்.
வேளாண் பொருளாதாரத்தை வலுப்படுத்த விவசாயிகள் ரயில் உதவும் என்று நிகழ்ச்சியில் பேசிய திரு.நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
திரு. ஜெகன் மோகன் ரெட்டி பேசுகையில், ஆந்திரப் பிரதேசத்தின் தோட்டக்கலை பொருட்கள் நாட்டின் இதர பகுதிகளை கிசான் ரயில் மூலம் எளிதாக இனிமேல் சென்றைடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விழாவுக்கு தலைமை தாங்கிய மத்திய ரயில்வே இணை அமைச்சர் திரு சுரேஷ் சி அங்காடி, வேளாண் பொருட்களை விரைவாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்து செல்ல கிசான் ரயில் உதவும் என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1652599
(Release ID: 1652771)