ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
இந்திய உரச்சங்கத்தின் தலைவராக ஃபாக்டின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு கிஷோர் ரங்க்டா பொறுப்பேற்றார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 AUG 2020 4:39PM by PIB Chennai
உர உற்பத்தியாளர்கள், விநியோகிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், உபகரண உற்பத்தியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியோர் அடங்கிய முக்கிய அமைப்பான இந்திய உரச் சங்கத்தின் தலைவராக ஃபாக்ட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு கிஷோர் ரங்க்டா பொறுப்பேற்றுள்ளார்.
இந்தச் சங்கத்தில், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த, உரத்துறை தொடர்புடையவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
(வெளியீட்டு அடையாள எண்: 1647224)
வருகையாளர் எண்ணிக்கை : 166