பாதுகாப்பு அமைச்சகம்

கோவாவின் கடற்படைப் போர்க் கல்லூரியில் 33வது கடற்படை உயர்கட்டளை பாடநெறி தொடங்குகிறது.

प्रविष्टि तिथि: 18 AUG 2020 6:24PM by PIB Chennai

கடற்படை உயர் கட்டளைப் பாடநெறி - 33 ஐ மும்பை பல்கலைக்கழகத்தின் மாண்புமிகு துணைவேந்தர் திரு. சுஹாஸ் பெட்னேகர் ஆகஸ்ட் 17, 2020 அன்று இணையம் மூலம் திறந்து வைத்தார். கோவாவின் கடற்படைப் போர் கல்லூரி (NWC) இணைய வடிவமைப்பைத் தழுவுவதிலும், கல்வி மற்றும் இராணுவ கல்வித் தரங்களை மேம்படுத்துவதிலும் மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார். இந்தியக் கடற்படையின் 37 வார முதன்மைத் தொழில்முறை இராணுவக் கல்வித் திட்டம், ஆண்டுதோறும் கோவாவின் கடற்படை கல்லூரியால் (NWC) நடத்தப்படுகிறது, இது கடல்சார் திட்டம், கடற்படை மற்றும் கூட்டு நடவடிக்கைகள் மற்றும் உருமாறும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துகிறது. வைஸ் அட்மிரல் ஏ.கே.சாவ்லா, PVSM, AVSM, NM, VSM, ADC, கொடி அதிகாரி தலைமைத் தளபதி, தெற்குக் கடற்படைக் கட்டளை, தனது சிறப்பு உரையில், வீடியோ இணைப்பில் வழங்கப்பட்ட பாடநெறி பங்கேற்பாளர்களுக்கான ஆக்கபூர்வமான கற்றல் மூலம் தொழில்முறை சிறப்படைவதை வலியுறுத்தினார். கடற்படைப் போர்க் கல்லூரியின் ரியர் அட்மிரல் சஞ்சய் ஜே சிங், AVSM, VSM கமாண்டன்ட், பாடநெறி பங்கேற்பாளர்களை வரவேற்று, கடற்படைப் போர்க் கல்லூரியால் (NWC) கல்வி மற்றும் இராணுவக் கல்வியின் தொகுப்புடன் உருவாக்கப்பட்ட கல்வி திறன் மற்றும் அறிவுசார் மூலதனத்தின் உயர் தரங்களைக் குறிப்பிட்டார்.

 

இந்தப் பாடத்திட்டத்தில் 35 பங்கேற்பாளர்கள் சேர்ந்துள்ள நிலையில், அதில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 21 கேப்டன்கள், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஏழு கர்னல்கள், இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஐந்து குழு கேப்டன்கள் மற்றும் கடலோரக் காவல்படையின் இரண்டு கமாண்டர்கள் உள்ளனர். கடல்சார் மற்றும் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களைக் கவுரவிப்பதற்காக, ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் விமர்சன சிந்தனைகளின் கடுமையான நெறிமுறைகள் மூலம் அறிவுசார் தேடலைத் தூண்டுவதை பாடத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கூட்டுத்திறனை வளர்ப்பதற்காக, இராணுவப் போரின் இராணுவத் தலைமையகமான இராணுவப் போர்க் கல்லூரியில் அதிகாரிகள் ஐந்து வார எளிய கூட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.  பாடநெறியில் பங்கேற்ற தகுதியானவர்களுக்கு மும்பை பல்கலைக்கழகத்தில் ‘பாதுகாப்பு மற்றும் திட்ட ஆய்வுகள்’ என்ற பாடத்தில் M.Phil. பட்டம் வழங்கப்படுகிறது.

-----------------------------


(रिलीज़ आईडी: 1646779) आगंतुक पटल : 242
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Manipuri , Punjabi , English , Urdu , Marathi , हिन्दी , Assamese