மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

மொபைல் போன் மற்றும் மின்னணு உதிரிப் பாகங்கள் உற்பத்தியில் ஒரு புதிய காலகட்டத்தை பி.எல்.ஐ திட்டம் எடுத்துக்காட்டுகிறது

Posted On: 01 AUG 2020 1:44PM by PIB Chennai

உற்பத்தி சார்ந்த ஊக்க நடவடிக்கைத் திட்டத்தின் (பி.எல்.) கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு நிறைவுற்றது என்பதைத் தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற செய்தியாளர்களுக்கான கருத்தரங்கில் மத்திய மின்னணு,  ஐடி, தொடர்பியல், சட்டம் மற்றும் நீதி அமைச்சர்  திரு. ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களுடன் உரையாற்றிய போது, சர்வதேச மற்றும் உள்நாட்டு மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மின்னணு உதிரிப் பாகங்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து வரப்பெற்றுள்ள விண்ணப்பங்களைப் பார்க்கும் போது பி.எல்.ஐ திட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்உலகத்தரத்திலான உற்பத்திக்கான இடமாக இந்தியாவின் பிரகாசமான வளர்ச்சியின் மீது தொழில்துறை அதிக நம்பிக்கையை வைத்துள்ளதுஇந்த நம்பிக்கை பிரதம மந்திரியின் முக்கிய அறைகூவலான ஆத்மநிர்பார் பாரத் சுயசார்பு இந்தியா என்பதற்கு வலு சேர்ப்பதாக உள்ளது.  ”நாங்கள் நம்பிக்கைவாதிகள் மற்றும் மதிப்புக்கூட்டல் சங்கிலித் தொடரில் வலுவான சூழல்சார் அமைப்பை கட்டமைத்து அதனை சர்வதேச மதிப்புக்கூட்டல் சங்கிலித் தொடரில் இணைத்து அதன் வழியாக நாட்டில் மின்னணுப் பொருள்கள் உற்பத்திக்கான சூழல்சார் அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் முனைந்துள்ளோம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

http://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/IMG-20200801-WA0029(1)X09T.jpg

மிகப் பெரும் அளவிலான மின்னணுப் பொருள்கள் உற்பத்தியோடு இணைந்த ஊக்க நடவடிக்கைத் திட்டமானது (பி.எல்.) 1 ஏப்ரல் 2020 அன்று அறிவிக்கை செய்யப்பட்டதுஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற இலக்குப் பிரிவுகளின் கீழ் வரும் சரக்குகளின் படிப்படியான விற்பனையில் (அடிப்படை ஆண்டின் மீது) 4% முதல் 6% வரை ஊக்கத்தொகை வழங்குவதை பி.எல்.ஐ திட்டம் விரிவுபடுத்தியுள்ளதுஅதாவது தகுதியுள்ள நிறுவனங்களுக்கு அடிப்படை ஆண்டைத் (நிதியாண்டு 2019-20) தொடர்ந்து 5 ஆண்டு காலகட்டத்திற்கு இந்த ஊக்கத்தொகையானது வழங்கப்படும்இந்தத் திட்டத்தின் கீழ் 31-7-2020 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்இந்தத் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகைகள் 1-8-2020 முதல் கிடைக்கும்.

பி.எல்.ஐ திட்டத்தின் கீழ் மொத்தமாக 22 நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனமொபைல் போன் (இன்வாய்ஸ் மதிப்பு ரூ15,000 மற்றும் அதற்கு மேல்) பிரிவின் கீழ் சர்வதேச மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களான சாம்சங், ஃபாக்ஸ்கான் ஹோன் ஹை, ரைசிங் ஸ்டார், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனஇதில் ஃபாக்ஸ்பான் ஹோன் ஹை, விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகிய 3 நிறுவனங்களும் ஆப்பிள் ஐ-போன்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரிப்பவை ஆகும்சர்வதேச அளவில் மொபைல் போன் விற்பனையில் சுமார் 60% வருவாயை ஆப்பிள் (37%) மற்றும் சாம்சங் (22%) ஆகியவை ஒருங்கிணைந்து பெற்றுள்ளன. இந்தத் திட்டமானது நாட்டில் இவற்றின் உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் போன் (உள்நாட்டு நிறுவனங்கள்) பிரிவின் கீழ் லாவா, டிக்சான் டெக்னாலஜிஸ், பாக்வதி (மைக்ரோமேக்ஸ்), பேட்ஜெட் எலெக்ட்ரானிக்ஸ், சோஜோ உற்பத்திச் சேவைகள் மற்றும் ஆப்டியமஸ் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் இந்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்தி மொபைல் போன் உற்பத்தியில் தேசிய சாம்பியன் நிறுவனங்களாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுகுறிப்பிட்ட மின்னணு உதிரிப்பாகங்கள் பிரிவின் கீழ் ஏடி& எஸ், அக்சன்ட் சர்க்கியூட், விசிகோன், வால்சின், சகஸ்ரா, விட்டஸ்கோ, நியோலிங்க் உள்ளிட்ட 10 நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.

அடுத்து வரும் 5 ஆண்டுகளில் இந்தத் திட்டம் ரூ.11,50,000 கோடி (ரூ11.5 லட்சம் கோடி) மதிப்புக்கு மொத்த உற்பத்திக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மொத்த உற்பத்தியில் மொபைல் போன் (இன்வாய்ஸ் மதிப்பு ரூ.15,000 மற்றும் அதற்கு மேல்) பிரிவின் கீழ் உள்ள நிறுவனங்கள் ரூ 9,00,000 கோடி மதிப்புக்கு உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளன.  மொபைல் போன் (உள்நாட்டு நிறுவனங்கள்) பிரிவின் கீழ் நிறுவனங்கள் ரூ.2,00,000 கோடி மதிப்பிலான உற்பத்திக்கு திட்டமிட்டு உள்ளன.  அதேபோன்று, குறிப்பிட்ட மின்னணு உதிரிப்பாகங்கள் பிரிவின் கீழ் ரூ.45,000 கோடி உற்பத்திக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டமானது குறிப்பிட்ட அளவு ஏற்றுமதிகளை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய மொத்த உற்பத்தியான ரூ.11,50,000 கோடியில் 60% அதிகமான தொகை அதாவது ரூ.7,00,000 கோடி ஏற்றுமதிகள் மூலம் கிடைக்கும்.  இந்தத் திட்டம் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் ரூ.11,000 கோடி கூடுதல் முதலீட்டுக்கு வழிவகுக்கும்.

இந்தத் திட்டமானது அடுத்து வரும் 5 ஆண்டுகளில் தோராயமாக 3 லட்சம் நேரடியான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். மேலும் கூடுதலாக நேரடி வேலைவாய்ப்பு எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாக மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.  மொபைல் போன்களைப் பொறுத்து உள்நாட்டு மதிப்புக் கூட்டல் என்பது தற்போதைய 15-20% இருந்து 35-40% வரை அதிகரிக்கும் என்றும் இது மின்னணு உதிரிப் பாகங்களுக்கு 45-50% வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்தியாவில் மின்னணுப் பொருள்களுக்கான தேவையானது 2025ஆம் ஆண்டில் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பி.எல்.ஐ திட்டம் மற்றும் மின்னணுப் பொருள்கள் உற்பத்தியை மேம்படுத்தக் கூடிய இதர முயற்சிகள் ஆகியன மின்னணு உற்பத்தியில் இந்தியாவை மிகச் சிறந்த போட்டியிடமாக மாற்ற உதவுவதோடு சுயசார்பு இந்தியாவை கட்டமைப்பதற்கான உந்துதலாகவும் இருக்கும் என்று மாண்புமிகு அமைச்சர் தனது நம்பிக்கையைத் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் மின்னணுப் பொருள்கள் உற்பத்தியில் உள்நாட்டு சாம்பியன் நிறுவனங்களை உருவாக்குவது என்பது சர்வதேச அளவில் விற்பனையை கவனத்தில் கொள்ளும் அதே நேரத்தில் உள்ளூர்த் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்போம் என்பதை நிறைவு செய்யும் வகையில் இருக்கும்.



(Release ID: 1642883) Visitor Counter : 372