தேர்தல் ஆணையம்

ஆந்திரப்பிரதேச மேலவைக்கான இடைத்தேர்தல்

Posted On: 30 JUL 2020 2:12PM by PIB Chennai

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் மேலவைக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மேலவையில் உள்ள ஒரு காலியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தலை நடத்துவதென தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

இதற்கான அறிவிக்கை 2020 ஆகஸ்ட் 6-ந் தேதியன்று வெளியிடப்படும். வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி – ஆகஸ்ட் 13 என்றும், மனுக்களை ஆய்வு செய்யும் தேதி ஆகஸ்ட் 14 என்றும், மனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 17, தேர்தல் நடைபெறும் நாள் ஆகஸ்ட் 24 என்றும், வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

*****



(Release ID: 1642350) Visitor Counter : 142