தேர்தல் ஆணையம்

உத்தரப்பிரதேசம், கேரள மாநில மேலவைக்கு இடைத்தேர்தல்

Posted On: 30 JUL 2020 11:58AM by PIB Chennai

உத்தரப்பிரதேசம் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள மேலவைகளில், தலா ஒன்று வீதம், இரண்டு உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல்களை நடத்துவதென தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. இதற்கான அறிவிக்கை 2020 ஆகஸ்ட் 6-ந் தேதியன்று வெளியிடப்படும். வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி – ஆகஸ்ட் 13 என்றும், மனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 17, தேர்தல் நாள் ஆகஸ்ட் 24 என்றும், வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

*****


 



(Release ID: 1642277) Visitor Counter : 141