ரெயில்வே அமைச்சகம்

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணித்த புலம் பெயர் தொழிலாளிகள் 50 லட்சம் பேருக்கு இந்திய ரயில்வே 85 லட்சத்துக்கும் மேற்பட்ட இலவச உணவு, சுமார் 1.25 கோடி தண்ணீர் பாட்டில்களை விநியோகித்துள்ளது

Posted On: 28 MAY 2020 7:50PM by PIB Chennai

2020 மே 1-ம்தேதி முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் பயணித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 85 லட்சத்துக்கும் மேற்பட்ட இலவச உணவு மற்றும் சுமார் 1.25 கோடி இலவச குடிதண்ணீர் பாட்டில்களை இந்திய ரயில்வே விநியோகித்துள்ளது. இந்திய ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான ஐஆர்சிடிசியால் தயாரிக்கப்பட்டு, மண்டல ரயில்வேக்களால் விநியோகிக்கப்பட்ட உணவும் இதில் அடங்கும். அனைத்து ஷ்ராமிக் சிறப்பு ரயில்களிலும் பயணம் செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவும் , தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டு வருகின்றன. பூரி, காய்கறி ஊறுகாய், ரொட்டி, காய்கறி ஊறுகாய், வாழைப்பழம், பிஸ்கட், கேக், இனிப்பு, உப்பு பிஸ்கட், இனிப்பு ,உப்பு கேக்,  வெஜிடபுள் புலாவ், பாவ் பாஜி, எலுமிச்சை சாதம், ஊறுகாய், உப்புமா, அவல், ஊறுகாய்  உள்ளிட்ட உணவு வகைகளையும், ரயில் நீர் குடிநீர் பாட்டில்களையும் ஐஆர்சிடிசி வழங்குகிறது.

பல்வேறு இடங்களில் சிக்கியிருந்த புலம் பெயர்ந்த தொழழிலாளர்கள், புனித யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் இதர பிரிவினரை சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்து வரவேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவையடுத்து, இந்திய ரயில்வே 2020 மே 1-ம் தேதி முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. 2020 மே 28-ம் தேதி வரை, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து 3736 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. மேலும் 67 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. 27.05.2020 அன்று, 172 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதுவரை, 27 நாட்களில், சுமார் 50 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த சிறப்பு ரயில்கள் மூலம் பயணம் செய்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இன்று இயக்கப்படும் ரயில்களில் பயணிகளின் நெருக்கடி காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு மாநிலங்களிலிருந்து இந்த 3736 ரயில்கள் புறப்பட்டன. மிக அதிகமான ரயில்கள் புறப்பட்ட 5 மாநிலங்கள் , குஜராத் (979 ரயில்கள்), மகாராஷ்ட்ரா ( 695 ரயில்கள்), பஞ்சாப்( 397 ரயில்கள்), உத்தரப் பிரதேசம் ( 263 ரயில்கள்), பிகார் (263 ரயில்கள்) ஆகும்.

இந்த ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன. மிக அதிக ரயில்கள் சென்ற 5 மாநிலங்கள், உத்தரப் பிரதேசம்( 1520 ரயில்கள்), பிகார்( 1296 ரயில்கள்) , ஜார்க்கண்ட் (167 ரயில்கள்), மத்தியப் பிரதேசம் ( 121 ரயில்கள்), ஒடிசா ( 139 ரயில்கள்) ஆகும்.

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுடன், புதுதில்லியை இணைக்கும் மேலும் 15 இணை சிறப்பு ரயில்களையும் ரயில்வே இயக்கி வருகிறது. ஜூன் 1-ம் தேதி முதல், நேர அட்டவணையுடன் கூடிய மேலும் 200 ரயில்களையும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

-----



(Release ID: 1627629) Visitor Counter : 231