உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

உயிர்காக்கும் உடான் விமான சேவையில் கோவிட்-19 முடக்கநிலை காலத்தில் 452 சேவைகள் இயக்கப்பட்டன

Posted On: 05 MAY 2020 7:12PM by PIB Chennai

`உயிர்காக்கும் உதான்' விமான சேவைகளின் வரிசையில் ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப் படை மற்றும் தனியார் துறையினர் மூலம் 452 விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றில் 272 விமான சேவைகள் ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் நிறுவனங்கள் மூலம் இயக்கப்பட்டுள்ளன. இதுநாள் வரையில் 824.44 டன் அளவுக்கு சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. உயிர்காக்கும் உதான் விமான சேவைகளில் இது வரையில் 4,41,564 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்று பாதிப்பு சூழ்நிலையில் எளிதில் அணுக முடியாத, தொலைதூரப் பகுதிகளுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்காக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இந்த `உயிர்காக்கும் உதான்' விமான சேவைகளை இயக்கி வருகிறது.

மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் நிவாரணப் பொருட்களைக் கையாள்வதற்காக கிழக்கு ஆசியாவுடன் சரக்கு ஏர்-பிரிட்ஜ் உருவாக்கப்பட்டுள்ளது.  ஏர் இந்தியா மூலம் 956 டன் அளவுக்கு மருத்துவ சரக்குகள் இந்தியாவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.



(Release ID: 1621387) Visitor Counter : 143