பிரதமர் அலுவலகம்
பிரதமர் மற்றும் ஜப்பான் பிரதமர் இடையிலான தொலைபேசி உரையாடல்
Posted On:
10 APR 2020 3:05PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஜப்பான் பிரதமர் திரு.ஷின்சோ அபேயுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.
கொவிட்-19 தொற்று காரணமாக, உலக சுகாதாரத்துக்கும், பொருளாதாரத்துக்கும் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண தத்தமது நாடுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைள் பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.
தற்போதைய நெருக்கடியான சூழலில், இரு நாடுகளிலும் பரஸ்பரம் தங்கியிருக்கும் மக்களுக்கு வழங்கப்படும் ஆதரவை இருதலைவர்களும் வரவேற்றதுடன், இத்தகைய ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்க உறுதியளித்தனர்.
பெருந்தொற்று காரணமாக எழுந்துள்ள சவால்களுக்கு தீர்வுகளைக் காண உலகுக்கு உதவுவதில், இந்தியா-ஜப்பான் கூட்டுறவு பெரும்பங்கு வகிக்கும் என்பதை இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
****
(Release ID: 1613011)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam