நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

கொவிட்-19 முடக்கநிலை காலத்தில் இந்திய உணவு கார்ப்பரேஷன் மார்ச் 24இல் இருந்து 14 நாட்களில், 721 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் 20.19 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை நாடு முழுக்கக் கொண்டு சென்றுள்ளது

प्रविष्टि तिथि: 07 APR 2020 8:59PM by PIB Chennai

பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜ்னா திட்டத்தை அமல்படுத்துவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் போதிய உணவு தானியங்களை இந்திய உணவு கார்ப்பரேஷன் (எப்.சி.ஐ.) அனுப்பி வைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டப் பயனாளிகள் அனைவருக்கும், அடுத்த 3 மாதங்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் எப்.சி.ஐ.யிடம் இருந்து உணவு தானியங்களை எடுத்துக் கொள்ளும் பணியை பல மாநிலங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. அடுத்த சில தினங்களில் மற்ற மாநிலங்களும் உணவு தானியங்களைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கிவிடும். மார்ச் 24 தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரையில்  மொத்தம் 658 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் 18.42 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதுதவிர 1.76 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 63 சரக்கு ரயில் பெட்டிகளில் இன்று ஏற்றப்படுகின்றன.


(रिलीज़ आईडी: 1612151) आगंतुक पटल : 127
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Kannada , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu