ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மருந்து விலை ஆணையகத்தின் விலை கண்காணிப்பு மற்றும் வள பிரிவு இன்று தொடக்கம்

நமது நாடு கொவிட்-19-க்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த பிரிவைத் தொடங்குவது முக்கியத்துவம் பெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 01 APR 2020 2:05PM by PIB Chennai

தேசிய மருந்து விலை ஆணையகத்தின் விலை கண்காணிப்பு மற்றும் வள பிரிவு இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்படுகிறது. விலை கண்காணிப்பு மற்றும் வள பிரிவு அமைக்கப்படும் 12-வது மாநிலம் ஜம்மு – காஷ்மீர் ஆகும்.

இந்த விலை கண்காணிப்பு மற்றும் வள பிரிவு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மருந்து கட்டுப்பாட்டாளர் துறையின் கீழ் இயங்கும்.

கொவிட்-19-க்கு எதிராக நமது நாடு போராடிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் மருந்து தட்டுப்பாடு/ பதுக்கல் ஆகியவை குறித்தும், அதிக விலையில் மருந்துகள் விற்கப்படுதல் குறித்தும் ஆராய இந்தப் பிரிவு தேசிய மருந்து விலை ஆணையத்திற்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கும் துணையாக இருக்கும்.

***
 


(வெளியீட்டு அடையாள எண்: 1609929) வருகையாளர் எண்ணிக்கை : 202
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Telugu