பிரதமர் அலுவலகம்

வங்கதேச பிரதமருக்கு பிரதமர் திரு. மோடி நன்றி

Posted On: 23 MAR 2020 3:30PM by PIB Chennai

கோவிட் - 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு பங்களிப்பு செய்தமைக்காக, வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவுக்கு  இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

``கோவிட் - 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு 1.5 மில்லியன் டாலர் பங்களிப்பு செய்திருப்பதற்குப் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய உறுதிப்பாடு மற்றும் ஒன்றுபட்ட செயல்பாட்டால், கோவிட் - 19 உருவாக்கியுள்ள சவால்களை நாம் வெற்றிகொள்வோம்'' என்று பிரதமர் கூறியுள்ளார்.

****



(Release ID: 1607795) Visitor Counter : 112