பிரதமர் அலுவலகம்

இலங்கை அதிபருக்கு பிரதமர் திரு. மோடி நன்றி

Posted On: 23 MAR 2020 3:18PM by PIB Chennai

கோவிட் - 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு பங்களிப்பு செய்தமைக்காக இலங்கை அதிபர் திரு. கோத்தபய ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

``சார்க் கோவிட் - 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு 5 மில்லியன் டாலர்களை நன்கொடையாக அளித்த இலங்கை அதிபர் திரு. கோத்தபய ராஜபக்சவுக்கு அன்புடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நோய்க்கு எதிரான நமது போராட்டம் செம்மையாக அமைய, நம்முடைய ஒத்துழைப்பு நீண்டகால பலன்களைத் தரும்'' என்று பிரதமர் கூறியுள்ளார்.

 

*****



(Release ID: 1607792) Visitor Counter : 91