பிரதமர் அலுவலகம்
இலங்கை அதிபருக்கு பிரதமர் திரு. மோடி நன்றி
Posted On:
23 MAR 2020 3:18PM by PIB Chennai
கோவிட் - 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு பங்களிப்பு செய்தமைக்காக இலங்கை அதிபர் திரு. கோத்தபய ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
``சார்க் கோவிட் - 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு 5 மில்லியன் டாலர்களை நன்கொடையாக அளித்த இலங்கை அதிபர் திரு. கோத்தபய ராஜபக்சவுக்கு அன்புடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நோய்க்கு எதிரான நமது போராட்டம் செம்மையாக அமைய, நம்முடைய ஒத்துழைப்பு நீண்டகால பலன்களைத் தரும்'' என்று பிரதமர் கூறியுள்ளார்.
*****
(Release ID: 1607792)
Visitor Counter : 91
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam