பிரதமர் அலுவலகம்

பிரதமருடன் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் திரு.டோனி அபோட் சந்திப்பு

Posted On: 20 NOV 2019 9:34PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடியை ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் திரு டோனி அபோட் இன்று சந்தித்தார். 

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட புதர்த்தீயால், உயிர்களுக்கும், உடமைகளுக்கும் ஏற்பட்ட சேதம் குறித்து பிரதமர் தமது இரங்கலைத் தெரிவித்தார்.

குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளையொட்டி, பொற்கோவிலுக்கு வருகை புரிவது உள்ளிட்ட திரு.டோனி அபோட்டின் இந்தியப் பயணம் குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில்  நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள தாம் சென்றதை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்.  அந்தப் பயணத்தின் போது, கான்பெர்ரா, சிட்னி, மெல்பர்ன் ஆகிய இடங்களில் நடைபெற்ற பயன்மிகு இருதரப்பு நிகழ்ச்சிகள், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் தாம் உரை நிகழ்த்தியது ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகளை வலுப்படுத்துவதில் திரு.டோனி அபோட் முக்கியப் பங்காற்றியதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

                          *****



(Release ID: 1592638) Visitor Counter : 101