பிரதமர் அலுவலகம்

நாடாளுமன்ற வளாகத்தில் வண்ண மின்விளக்கு வசதியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Posted On: 13 AUG 2019 8:45PM by PIB Chennai

சுதந்திர தினத்தை கொண்டாட இந்தியா தயாராகி வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் வண்ண மின்விளக்குகள் வசதியை செவ்வாய் அன்று, (13, ஆகஸ்ட் 2019) மாலை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த வண்ண மின்விளக்குகள் காட்சியின் சில பகுதிகளையும் பிரதமர் பார்வையிட்டார். குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள பிரிவுகள் போன்ற முக்கியமான அரசு கட்டிடங்களில் இத்தகைய மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தில்லியின் மையப் பகுதியில் உள்ள இத்தகைய சிறப்புமிக்க இடங்களை மக்கள் அதிக எண்ணிக்கையில் பார்வையிடுவதை வண்ண மின்விளக்குகள் அலங்காரம் ஊக்கப்படுத்துகிறது. பொது மக்களிடையே இது அதிகமாகப் பிரபலமடைந்து வருகிறது.


(Release ID: 1581916)