மத்திய அமைச்சரவை
சுரங்கப் பணியாளர்களின் தேசிய சுகாதார நிறுவனத்தை, ஐசிஎம்ஆர்-தொழில்சார்ந்த சுகாதாரத்திற்கான நிறுவனத்துடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUL 2019 4:19PM by PIB Chennai
மத்திய சுரங்கங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான, சுரங்கப்பணியாளர்கள் ஆரோக்கியத்திற்கான தேசிய நிறுவனத்தைக் கலைத்து, அதன் சொத்துக்கள் மற்றும் கடன் பொறுப்புகளுடன் அதனை சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் அகமதாபாதில் உள்ள ஐசிஎம்ஆர் – தொழில்சார் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவனத்துடன் இணைக்க / ஒன்றுசேர்க்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் அதே பதவியிலும் / அதே ஊதியத்திலும் இணைப்பு நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்த இணைப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை இரு நிறுவனங்களும், மேற்கொள்ளும்.
இந்த இணைப்பின் மூலம் மக்களின் பணம் திறமையாக நிர்வகிக்கப்படுவதோடு, தொழில்சார்ந்த சுகாதாரத்துறையின் நிபுணத்துவமும் விரிவுப்படுத்தப்படும்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1580103)
வருகையாளர் எண்ணிக்கை : 169
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam