மத்திய அமைச்சரவை
மன்டேச்சூ புனல்மின் திட்டம் தொடர்பான கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க இந்தியா-பூடான் இடையேயான ஒப்பந்தத்தின் பிரிவு-3-ஐ திருத்த அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
07 MAR 2019 2:36PM by PIB Chennai
மன்டேச்சூ புனல்மின் திட்டம் தொடர்பான கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க இந்தியா-பூடான் இடையேயான ஒப்பந்தத்தின் பிரிவு-3-ஐ திருத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தத் திட்டம் பூடானில் அமலாக்கும் காலம் 15 ஆண்டுகளில் இருந்து 17 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
பயன்கள்:
i. இந்தத் திட்டத்திலிருந்து முதல் ஆண்டில் யூனிட்டுக்கு ரூ.4.12 பைசா என்ற கட்டணத்தில் 720 மெகாவாட் மின்சாரம் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும்.
ii. உபரி மின்சாரம் இந்தியாவுக்கு வழங்கப்படும் என பூடான் உறுதி செய்துள்ளது.
iii. இதன் மூலம் இந்தியா-பூடான் பொருளாதார உறவுகள் வலுப்படுவதோடு, புனல் மின்சாரத் துறையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
*****
(Release ID: 1567972)
Visitor Counter : 100