மத்திய அமைச்சரவை

பசுக்கள் அதன் சந்ததிப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான தேசிய காமதேனு அமைப்பை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 FEB 2019 9:33PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை   பசுக்கள் மற்றும் அதன் சந்ததி பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் தேசிய காமதேனு அமைப்பை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

      நாட்டிலுள்ள கால்நடைகளைப் பாதுகாக்கவும், அதன் நலனைப் பேணவும், தேசிய காமதேனு அமைப்பு உதவும்.  முக்கியமாக உள்நாட்டு இன கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது உதவியாக இருக்கும்.  

      பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் இது பயனளிக்கும். பசுக்கள் இனப்பெருக்கம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உரம் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் மத்திய, மாநில அரசின் கீழ் செயல்படும் கால்நடை மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்த அமைப்பு செயல்படும்.

தேசிய காமதேனு அமைப்பு நிறுவப்படும் என்று மத்திய பட்ஜெட்      2019-20-ல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

*****

 



(Release ID: 1563227) Visitor Counter : 108