மத்திய அமைச்சரவை

இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே மின்னணு நிர்வாகத் துறையில் ஒத்துழைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 FEB 2019 9:44PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையே மின்னணு நிர்வாகத் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது. 

     இந்த ஒப்பந்தம் மின்னணு நிர்வாகம், தகவல் தொழில்நுட்பக் கல்வி, பல்வேறு துறைகளில் மின்னணு நிர்வாக அமலாக்கம், தரவு மையங்கள் அமைப்பது ஆகியவற்றை ஊக்குவிக்கும்.



(Release ID: 1563127) Visitor Counter : 64