மத்திய அமைச்சரவை
சர்வதேச எரிசக்தி முகமையின் கீழ் உள்ள மேம்பட்ட மோட்டார் எரிபொருள் தொழில்நுட்பம் ஒருங்கிணைப்பு திட்டத்தில் இந்தியா உறுப்பினராக சேர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
08 NOV 2018 8:40PM by PIB Chennai
சர்வதேச எரிசக்தி முகமையின் கீழ் உள்ள மேம்பட்ட மோட்டார் எரிபொருள் தொழில்நுட்பம் ஒருங்கிணைப்பு திட்டத்தில் இந்தியா மே 9, 2018 அன்று உறுப்பினராக சேர்ந்ததற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச எரிசக்தி முகமையின் கீழ் இயங்கும் இந்த மேம்பட்ட மோட்டார் எரிபொருள் தொழில்நுட்பம் ஒருங்கிணைப்பு திட்டத்தில் இந்தியா மார்ச் 30, 2017-ல் முதல் “கூட்டமைப்பு” அந்தஸ்தில் இருந்து வருகிறது.
********
(வெளியீட்டு அடையாள எண்: 1552229)
வருகையாளர் எண்ணிக்கை : 183