மத்திய அமைச்சரவை

குற்றம் சார்ந்த விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிக்காக இந்தியா-மொராக்கோ இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 01 NOV 2018 12:18PM by PIB Chennai

குற்றம் சார்ந்த விஷயங்களில் பரஸ்பரம் சட்ட உதவிக்காக இந்தியா-மொராக்கோ இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பயன்கள்

குற்றச்செயல் தொடர்பான புலனாய்வு, வழக்கு, குற்றம் செய்தவர்களைத் தேடுதல், பிடித்து வைத்தல், பறிமுதல் செய்தல் போன்றவற்றில் இந்தியா-மொராக்கோ இடையே  இருதரப்பு ஒத்துழைப்புக்கான விரிவான சட்டக் கட்டமைப்பை இந்த ஒப்பந்தம் அளிக்கிறது. ஒட்டுமொத்த சமூகத்தின் மேம்பாட்டிற்கு முன்- தேவையாக இருக்கும் அமைதியை உருவாக்குவதற்கு குற்றச்செயல் தொடர்பான புலனாய்வையும், வழக்குத் தொடுப்பையும், தீவிரமாக அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் பயங்கரவாதிகளின் செயல்களை தடுப்பதற்கும், உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான கொள்கை முடிவுகளை மேம்படுத்துவதற்கும் இது பயன்படும்.

                                                          *****



(Release ID: 1551499) Visitor Counter : 119