மத்திய அமைச்சரவை

இந்தியா மற்றும் மலாவி இடையே குற்றம் புரிந்தவர்களை அந்த திருப்பிஅனுப்புதல் குறித்த உடன்படிக்கை ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 24 OCT 2018 1:27PM by PIB Chennai

இந்தியா மற்றும் மலாவி இடையே குற்றம் புரிந்தவர்களை உரிய நாட்டுக்குத் திருப்பி அனுப்புதல் குறித்த ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய  அமைச்சரவை ஏற்பு அளித்துள்ளது.

 பயங்கரவாதிகள், பொருளாதாரக் குற்றவாளிகள் மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இந்தியாவில் இருந்து மலாவிக்கும் மலாவியில் இருந்து இந்தியாவிற்கும் திருப்பி அனுப்புவது குறித்த சட்டக் கட்டமைப்பை உருவாக்க  இந்த ஒப்பந்தம் வழங்கும்.

*************



(Release ID: 1550491) Visitor Counter : 108