மத்திய அமைச்சரவை
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இணைந்து வெளியிட்ட அஞ்சல் தலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
09 AUG 2018 5:02PM by PIB Chennai
“இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான 20 வருட உத்திசார் கூட்டாண்மை” என்ற தலைப்பில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அஞ்சல் தலை குறித்து புதுதில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள இந்த நினைவு அஞ்சல் தலையில் தீன் தயாள் உபாத்யாயா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஆலிவர் ரெஜினால்டு டாம்போ ஆகியோரின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா இடையே 2018 மே மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
(Release ID: 1542361)