வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் தடையற்ற விற்பனை, வர்த்தக சான்றிதழ்களை தானியங்கி முறையில் அளிக்கும் வசதியை தொடங்கியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2026 12:26PM by PIB Chennai
ஏற்றுமதியாளர்கள் எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அரசு அவ்வப்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக வெளிநாட்டு வர்த்தகக் தலைமை இயக்குநரகம் தமது இணையதளத்தில் தடையற்ற விற்பனை மற்றும் வர்த்தகச் சான்றிதழ்களை தானியங்கி முறையில் அளிக்கும் வசதியைத் தொடங்கியுள்ளது. 1940-ம் ஆண்டு மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வரம்பிற்குள் வராதப் பொருட்களுக்கு வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ் இச்சான்றிதழ்கள் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. தற்போது இந்தச் சான்றிதழ்கள் வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரகத்தின் பிராந்திய அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் அளிக்கப்படுகிறது.
இனி, தகுதியுடைய விண்ணப்பங்கள் நேரடி பரிசீலனைக்கு அனுப்பப்படாமல் தானியங்கி முறையில் சான்றிதழ்கள் வழங்குவதற்குப் பரிசீலிக்கப்படும். இந்த தானியங்கி நடைமுறை தடையற்ற விற்பனை மற்றும் வர்த்தகச் சான்றிதழ் விண்ணப்பங்களுக்கான செயல்முறை நேரத்தைக் குறைக்கிறது.
சரிபார்த்தல் தேவைப்படும் விண்ணப்பங்கள் அல்லது தானியங்கி முறையில் செயல்முறையைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்காகச் சம்பந்தப்பட்ட மண்டல அதிகாரிக்கு அனுப்பப்படும்.
தானியங்கி முறையில் ஒப்புதல் வழங்கப்பட்ட சில விண்ணப்பங்கள் இடர் மேலாண்மை அடிப்படையின் கீழ் மறு ஆய்வுக்காக சம்பந்தப்பட்ட மண்டல அதிகாரியிடம் சமர்பிக்கப்படலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305357®=3&lang=1
***
SS/IR/PS/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2305557)
வருகையாளர் எண்ணிக்கை : 8