ரெயில்வே அமைச்சகம்
3,000 லிட்டர் டீசல் புகையிலிருந்து விடுதலை இந்தியாவின் ஹைட்ரஜன் ரயிலின் கதை
प्रविष्टि तिथि:
25 JUL 2026 2:19PM by PIB Chennai
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில், 2026 ஜூலை 17 அன்று ஜிந்த் - சோனிபட் இடையே கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. இதுவரை, இந்த ரயில் 1200 கிலோமீட்டருக்கும் மேல் தடையின்றி பயணித்து, 3200 லிட்டருக்கும் அதிகமான டீசல் பயன்பாட்டைச் சேமித்துள்ளது.
ஹைட்ரஜன் ரயில், ஹைட்ரஜனுக்கும் ஆக்ஸிஜனுக்கும் இடையே நிகழும் ஒரு வேதிவினை மூலம், ரயிலுக்குள்ளேயே மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இந்த செயல்முறை, ரயிலை இயக்குவதற்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வதோடு, கூடுதல் பொருளாக நீராவியை மட்டுமே வெளியிடுகிறது. இதில் புகை இல்லை, புகைப்போக்கியிலிருந்து கார்பன் வெளியேற்றமும் இல்லை. இதனால், இது தற்போது கிடைக்கக்கூடிய ரயில் உந்துவிசை முறைகளிலேயே மிகவும் தூய்மையானதாக விளங்குகிறது.
இந்தத் திட்டம் இந்திய ரயில்வே தலைமையிலான ஒரு உள்நாட்டு முயற்சியாகும். 10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் உள்ள இரண்டு ஹைட்ரஜன் உந்துசக்திப் பெட்டிகள், லித்தியம் இரும்பு பாஸ்பேட் மின்கலங்கள், ஹைட்ரஜன் உருளைகள் ஆகியவற்றின் ஆதரவுடன், மொத்தமாக 2,400 கிலோவாட் சக்தியை வழங்குகின்றன.
500 பார் வரையிலான அழுத்தத்தில் சேமிக்கப்பட்ட பசுமை ஹைட்ரஜனை, 350 பார் அழுத்தத்தில் சுமார் 3,000 கிலோ மொத்த சேமிப்பு வசதியுடன் விநியோகிப்பதன் மூலம், ஜிந்த் என்னுமிடத்தில் ரயில்வேயின் முதல் பிரத்யேக ஹைட்ரஜன் சேமிப்பு நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜிந்த் - சோனிபத் இடையேயான வெற்றிகரமான செயல்பாட்டைத் தொடர்ந்து, டெல்லி வழித்தடத்தில் சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கும்.
இந்தியாவின் ஹைட்ரஜன் எரிபொருள் செல் ரயில் என்பது ஒரு தொழில்நுட்பச் சாதனை மட்டுமல்ல. அது ஒரு உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் சூழலமைப்பை நிறுவுவதோடு, நீடித்த, மாசு உமிழ்வற்ற ரயில் போக்குவரத்திற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, தூய்மையான போக்குவரத்தில் எதிர்கால விரிவாக்கத்திற்கும் உலகளாவிய தலைமைத்துவத்திற்கும் வழி வகுக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289319®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2289331)
आगंतुक पटल : 10