பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் ஜவுளித்துறையின் வலிமை, 2030 தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை பாரத் டெக்ஸ் 2026 எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 15 JUL 2026 2:34PM by PIB Chennai

இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளித்துறை மதிப்பை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து நாட்டின் உற்பத்தி வலிமை, வளமையான ஜவுளி பாரம்பரியம், விரிவடைந்து வரும் உலகளாவிய வாய்ப்பு ஆகியவற்றை எவ்வாறு பாரத் டெக்ஸ் 2026 பிரதிபலிக்கிறது என்பது குறித்து மத்திய இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். ஜவுளித்துறைக்கான இந்தியாவின் 2030 தொலைநோக்குப் பார்வையையும் இது பிரதிபலிப்பதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

“பாரத் டெக்ஸ் 2026, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளித்துறை மதிப்பை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து நாட்டின் உற்பத்தி வலிமை, வளமையான ஜவுளி பாரம்பரியம், வளர்ந்து வரும் உலகளாவிய வாய்ப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதாக மத்திய இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா எழுதியுள்ளார்.  ஜவுளித்துறைக்கான இந்தியாவின் 2030 தொலைநோக்குப் பார்வையையும் இது பிரதிபலிக்கிறது.

***

(Release ID: 2284769)

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2285008) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam