குடியரசுத் தலைவர் செயலகம்
தனிமனிதனை சுயசிந்தனையுடனும், சமூகத்தை இயற்கையுடனும், மனிதகுலத்தை பிரபஞ்ச உணர்வுடனும் இணைக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகம் யோகா: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு
प्रविष्टि तिथि:
21 JUN 2026 12:56PM by PIB Chennai
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூன் 21, 2026) மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற கூட்டு யோகா செயல்முறை விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள யோகா பயிற்றுனர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். ஆரோக்கியமான, சமச்சீரான, அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான பாதையை மனிதகுலத்திற்கு அளித்த இந்தியாவின் மகத்தான பாரம்பரியத்தை இன்று கொண்டாடுகிறோம் என்று அவர் கூறினார். உலகிற்கு இந்தியக் கலாச்சார பாரம்பரியம் வழங்கிய விலைமதிப்பற்ற பரிசு யோகா என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
தனிமனிதனை சுயசிந்தனையுடனும், சமூகத்தை இயற்கையுடனும், மனிதகுலத்தை பிரபஞ்ச உணர்வுடனும் இணைக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகம் யோகா என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். உலக நாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இந்தத் தருணத்தில், அமைதி, சமநிலை, நல்லிணக்கம், கூட்டு நல்வாழ்வு போன்ற அம்சங்களை நோக்கி மனிதகுலத்தை வழிநடத்துவதில் யோகா முக்கிய பங்காற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியா மேற்கொண்ட முயற்சியால் ஐநா பொதுச் சபை, கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்ததை குடியரசுத் தலைவர் நினைவு கூர்ந்தார். இந்த அறிவிப்பு, உலகளவில் நல்வாழ்வுக்கான ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக யோகாவிற்கு கிடைத்த அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இன்று, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், யோகாவை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றிக்கொண்டு வருகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276019®=3&lang=1
***
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2276370)
आगंतुक पटल : 8