பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்காசியாவில் நிலவி வரும் சூழலுக்கு இடையே, நாட்டின் உரப் பாதுகாப்பு வலுவாகவும், நிலையானதாகவும் உள்ளது

प्रविष्टि तिथि: 11 JUN 2026 7:07PM by PIB Chennai

மேற்கு ஆசியாவில் மாறிவரும் சூழலுக்கு இடையே, மத்திய அரசு அவ்வப்போது தகவல்களை வழங்குவதன் மூலம், குடிமக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக, தேசிய ஊடக மையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் ஆகிய அமைச்சகங்களின் அதிகாரிகள் நாட்டின் எரிபொருள் கையிருப்பு, கடல்சார் செயல்பாடுகள், அப்பகுதியில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் உதவிகள், முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்கினர். மேலும், நாட்டில் உரங்களின் கையிருப்பு குறித்த தகவல்களை மத்திய உரத்துறை அமைச்சகம் பகிர்ந்து கொண்டுள்ளது.

நாட்டில் உரங்களின் ஒட்டுமொத்த கையிருப்பு திருப்திகரமாக உள்ளது.

2026-ம் ஆண்டின் காரீஃப் பருவத்திற்கான உரத் தேவையை, மத்திய  வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை 383.9 லட்சம் மெட்ரிக் டன்களாக மறுமதிப்பீடு செய்துள்ளது. இன்றைய நிலவரப்படி 195.79 லட்சம் மெட்ரிக் டன் (51%-க்கும் மேல்) உரங்கள் கையிருப்பில் உள்ளது. இது வழக்கமான அளவான 33 சதவீதத்தைக் காட்டிலும் கூடுதலாகும். மத்திய அரசின் மேம்பட்ட திட்டமிடல் நடவடிக்கைகள், முன்கூட்டியே இருப்பு வைத்தல், திறன்வாய்ந்த சரக்கு மேலாண்மை போன்ற நடவடிக்கைகளை இது பிரதிபலிப்பதாக உள்ளது.

நடப்பு காரீஃப் பருவத்தில், 07.06.2026 வரை, நாட்டில் உள்ள விவசாயிகள் மொத்தம் 94.60 லட்சம் மெட்ரிக் டன் ரசாயன உரங்களை கொள்முதல் செய்துள்ளனர். இது மொத்த உரத் தேவையில் 25% ஆகும். நாட்டில் 22.80 லட்சம் மெட்ரிக் டன் இயற்கை உரம் கையிருப்பில்  உள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 3.24 லட்சம் மெட்ரிக் டன் இயற்கை உரம் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது (குறிப்பிட்ட காலப்பகுதியில்) விவசாயிகள் 11.38 லட்சம் மெட்ரிக் டன் இயற்கை உரங்களை வாங்கியுள்ளனர் (பஞ்சாப் 2.88 லட்சம் மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசம் 2.76 லட்சம் மெட்ரிக் டன், ஹரியானா 1.37 லட்சம் மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசம் 1.27 லட்சம் மெட்ரிக் டன், குஜராத் 0.98 லட்சம் மெட்ரிக் டன், மகாராஷ்டிரா 0.84 லட்சம் மெட்ரிக் டன்). இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, இயற்கை ஊட்டச்சத்து ஆதாரங்கள் அதிகம் பயன்படுத்துவது தொடர்பான நேர்மறையான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதுடன், ரசாயன உரப் பயன்பாட்டிலிருந்து, இயற்கை உரத்தை பயன்படுத்துவதற்கு விவசாயிகள் மாறி வருவதையும் இது  சுட்டிக்காட்டுகிறது.

தற்போது, நடைபெற்று வரும் காரீஃப் பருவத்திற்கான உரங்கள் கிடைப்பதில் பெரிய சவால்கள் ஏதுமில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271798&reg=48&lang=1&v=1&n=dvdsv

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2271902) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Odia , Kannada , Malayalam