ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஹோமியோபதி மருத்துவ முறை குறித்த பொது விவாதங்களில் பொறுப்புடன் செயல்பபட வேண்டும் என்று தேசிய ஹோமியோபதி ஆணையம் அறிவுறுத்தல்

प्रविष्टि तिथि: 10 JUN 2026 3:49PM by PIB Chennai

ஹோமியோபதி மருத்துவக் கல்விபயிற்சிதொழில்முறை நடத்தை விதிமுறைகள்நெறிமுறைகள் ஆகியவற்றின் தர நிலையை ஒழுங்குபடுத்திப் பராமரிக்கும் தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டுஹோமியோபதி மருத்துவம்அது சார்ந்த மருத்துவர்கள் குறித்து வெளியிடப்படும் பொறுப்பற்றஆதாரமற்ற கருத்துகளுக்கு எதிராக, 08.06.2026 தேதியிடப்பட்ட சுற்றறிக்கையை ஹோமியோபதி ஆணையம் வெளியிட்டுள்ளதாக அதன் தலைவர் டாக்டர் தர்கேஷ்வர் ஜெயின் தெரிவித்தார்.

அச்சுமின்னணுடிஜிட்டல்சமூக ஊடகத் தளங்கள் வாயிலாக இழிவானஅவதூறானதவறானசரிபார்க்கப்படாத கருத்துகள் பரப்பப்படுவது குறித்து கண்காணித்து வரும் ஆணையம்பொது விவாதங்களில்உண்மையானதுல்லியமானபொறுப்பான தகவல் பரிமாற்றத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளது.

'தேசிய ஹோமியோபதி ஆணையச் சட்டம், 2020'-ன் கீழ்ஹோமியோபதி மருத்துவம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறையாக உள்ளது என்றும்மருந்துகள்அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940-ன் கீழ்ஹோமியோபதி மருந்துகள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும்ஹோமியோபதி மருத்துவத்தில்  இளங்கலைமுதுகலை படிப்புகள் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட கல்வி முறையின் கீழ்நடத்தப்பட்டு வருவதாகவும்நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களே இதில் சேர்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பதிவுசெய்யப்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்விபயிற்சித் தர நிலைகளுக்கு  உட்பட்டுத் தகுதி பெறுவதுடன்பொருந்தக்கூடிய சட்டம்ஒழுங்குமுறை விதிகளின்படிஹோமியோபதி மருத்துவப் பயிற்சியை மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என்றும் டாக்டர் ஜெயின் கூறினார்

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271132&reg=3&lang=1 

***

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2271343) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati