பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய கடல்சார் தினத்தில் இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 05 APR 2026 2:29PM by PIB Chennai

தேசிய கடல்சார் தினத்தில் இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தை நினைவு கூர்ந்த பிரதமர் திரு நரேந்திர மோடி இத்துறையில் தொடர்புடைய அனைவரது மதிப்புமிக்க பங்களிப்புகளையும் பாராட்டினார்.

கடல்சார் துறையில் தனிநபர்களின் அர்ப்பணிப்பு நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், போக்குவரத்தை வலுப்படுத்துவதாக திரு மோடி குறிப்பிட்டார்.

நாட்டின் வளமையான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக கடல்சார் துறையில் உள்ள பெரும் வாய்ப்புகளை பயன்படுத்த அரசின் உறுதியை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

“தேசிய கடல்சார் தினத்தில் நாம் இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தையும் இத்துறையுடன் தொடர்புடைய அனைவரது மதிப்புமிக்க பங்களிப்புகளையும்  நினைவு கூர்கிறோம். அவர்களுடைய அர்ப்பணிப்பு நமது பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை வலுப்படுத்துகிறது. 

வளமையான எதிர்காலத்திற்காக நமது கடல்சார் துறையின் பெரும் வாய்ப்புகளை நாம் தொடர்ந்து பயன்படுத்துவோம்.” 

***

 

SS/IR/KPG/SE

 

(रिलीज़ आईडी: 2268865) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam