சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் தொடர்பான செயலியின் முன்னோட்டப் பதிப்பு தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 29 MAY 2026 2:08PM by PIB Chennai

2026-ம் ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டிமத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவாபுகையிலையற்ற கல்வி நிறுவனங்கள் (டிஓஎஃப்இஐஎன்பது தொடர்பான செயலியின் முன்னோட்டப் பதிப்பைத் தொடங்கி வைத்தார். புகையிலைநிக்கோட்டின் பழக்கத்தால் ஏற்படும் உடல்நல சீர்கேட்டில் இருந்து எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதில் இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் விதமாகதேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதுதில்லி கடமை மாளிகையில் இன்று (29.05.2026) நடைபெற்ற நிகழ்வில் இந்த செயலி வெளியிடப்பட்டது.

டிஓஎஃப்இஐ செயலி என்பதுநாடு முழுவதும் உள்ள பள்ளிகள்கல்லூரிகளில் புகையிலை இல்லாத நெறிமுறைகளின் செயலாக்கம்கண்காணிப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு டிஜிட்டல் முன்முயற்சி ஆகும்.

இந்தச் செயலி பின்வருவனவற்றை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது:

கல்வி நிறுவனங்களின் சுய மதிப்பீடுஅறிக்கை வெளியிடல்

*  டிஓஎஃப்இஐ வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதைக் கண்காணித்தல்

புகையிலைக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்துதல்;

கல்வி நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தூரத்திற்குள் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்குத் தடை

மாணவர்கள்ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயல்பாடுகள்

புகையிலை இல்லாத நடைமுறைகள் அமலாக்கத்தை வலுப்படுத்துதல்

இந்த டிஜிட்டல் தளம்தரப்படுத்தப்பட்ட கண்காணிப்புஅறிக்கையிடல்இணக்க மதிப்பீட்டு வழிமுறைகள் ஆகியவை மூலம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்கல்வி நிறுவனங்கள்திட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம்பொறுப்புணர்வை மேம்படுத்திகுழந்தைகள்இளம் பருவத்தினருக்கு ஆரோக்கியமானபுகையிலையற்ற சூழல்களை இது ஊக்குவிக்கும்.

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் (டிஓஎஃப்இஐசெயலியின் முன்னோட்டப் பதிப்பின் வெளியீடு குறித்துப் பேசிய மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவாகல்வி நிறுவனங்களை புகையிலை இல்லாத பகுதிகளாக மாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

புகையிலைப் பயன்பாடுபுற்றுநோய்கள்இதய நோய்கள்பக்கவாதம்நாள்பட்ட சுவாச நோய்கள் போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் புகையிலைக் கட்டுப்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதில் மாநிலங்கள்யூனியன் பிரதேசங்கள்கல்வி நிறுவனங்கள்சுகாதார வல்லுநர்கள்அமலாக்க அதிகாரிகள்சமூக அமைப்புகள்சமூகப் பணியாளர்களின் தொடர்ச்சியான முயற்சிகளை அவர் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மூத்த அரசு அதிகாரிகள்தொழில்நுட்ப வல்லுநர்கள்,  சுகாதாரப் பணியாளர்கள்சமூக அமைப்பினர்புகையிலைக் கட்டுப்பாட்டுத் துறையில் பணியாற்றும் பிற தரப்பினர் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266568&reg=3&lang=1

 

***

SS/PLM/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2266761) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Telugu , Malayalam