பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐதராபாதில் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை பிரதமர் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAY 2026 10:07PM by PIB Chennai

ஐதராபாதில்  ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களது இல்லத்தில் இன்று (10.05.2026) சந்தித்தார்.

திரு சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியளிப்பதாகவும் பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாகவும் பிரதமர் கூறினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது :

“ஐதராபாதில்  ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை அவர்களது இல்லத்தில் சந்தித்தேன். அவர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியளிக்கிறது, பல்வேறு தலைப்புகளில் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.”


(வெளியீட்டு அடையாள எண்: 2260265) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam