பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2026 7:22AM by PIB Chennai

கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதனை அரசு நியமித்துள்ளது. தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, 2026 மே 31 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் 2025 ஜூலை 31 அன்று மேற்கு கடற்படை கமாண்டிங் தளபதியாக பொறுப்பேற்றார். அவர், 1987 ஜூலை 01 அன்று இந்திய கடற்படையில் நியமிக்கப்பட்டார். தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் நிபுணர் ஆவார். அவர் கடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாடமி, ஸ்ரீவென்ஹாமில் உள்ள பிரிட்டன் கூட்டு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி, கரஞ்சா கடற்படை போர் கல்லூரி, ரோட் லாஸ்லேண்ட் நியூபோர்ட் அமெரிக்க கடற்படை போர் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார்.

பரம் விஷிஷ்ட சேவா பதக்கம், அதி விஷிஷ்ட சேவா பதக்கம், விஷிஷ்ட சேவா பதக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ள அட்மிரல், தனது கடற்படை வாழ்க்கையில் ஏவுகணைக் கப்பல்களான ஐஎன்எஸ் வித்யுத் மற்றும் வினாஷ், ஏவுகணை அழிக்கும் ஐஎன்எஸ் மைசூர் மற்றும் விமானம் தாங்கி ஐஎன்எஸ் விக்ரமாதித்யா உள்ளிட்ட பல முக்கிய செயல்பாட்டு, ஊழியர்கள் மற்றும் பயிற்சி நியமனங்களை வகித்துள்ளார்.

ரியர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட பிறகு, கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தலைமை பணியாளர் அதிகாரியாக (பயிற்சி) பணியாற்றினார். மேலும் இந்திய கடற்படை முழுவதும் பயிற்சியை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். கடற்படையின் அனைத்து பிரிவுகளிலும் செயல்பாட்டு பாதுகாப்பை மேற்பார்வையிடும் இந்திய கடற்படை பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். அதன் பிறகு அவர் மேற்கு கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து, அவர் கடலோர பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் கொடி அதிகாரியாகவும், இந்திய அரசின் கடலோர பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.

துணை அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட பின்னர், அவர் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி, பணியாளர் சேவைகள் கட்டுப்பாட்டாளர் மற்றும் கடற்படை தலைமையகத்தில் பணியாளர் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்தார். தனது தற்போதைய பணிக்கு முன்பு, அவர் கடற்படை தலைமையகத்தில் கடற்படை பணியாளர்களின் துணைத் தலைவராக பணியாற்றினார்.

வைஸ் அட்மிரல் சுவாமிநாதனின் கல்வித் தகுதிகளில் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி. எஸ்சி பட்டம்; கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பு பிரிவில் எம். எஸ்சி ஆகியவை அடங்கும்.  லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பாதுகாப்பு ஆய்வுகளில் எம். ஏ., மும்பை பல்கலைக்கழகத்தில் உத்திசார் ஆய்வுகளில் எம்ஃபில் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகளில் முனைவர் பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

 (Release ID: 2259243)

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259341) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam