பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாம் மாநிலம் திப்ருகரில் வடகிழக்குப் பகுதியின் முதலாவது அவசர கால விமான தரையிறங்கும் வசதியைப் பிரதமர் திறந்து வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 FEB 2026 7:29PM by PIB Chennai

அசாமின் திப்ருகரில் வடகிழக்குப் பகுதியில் முதலாவதாக அமைக்கப்பட்டுள்ள, அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் சாலை வசதியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். வடகிழக்கு பகுதிக்கு அவசர கால தரையிறங்கும் வசதி கிடைப்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயம் என்றும், இது ஒரு உத்திசார் கண்ணோட்டத்திலும் இயற்கை பேரிடர்களின் போதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"வடகிழக்குப் பகுதி அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் வசதியைப் பெறுவது மிகுந்த பெருமைக்குரிய விஷயம். உத்திசார் கண்ணோட்டத்திலும், இயற்கை பேரிடர்களின் போதும், இந்த வசதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது."

---

(Release ID: 2228188)

TV/PLM/EA

 


(வெளியீட்டு அடையாள எண்: 2243096) வருகையாளர் எண்ணிக்கை : 35