பிரதமர் அலுவலகம்
ஏஐ தாக்க உச்சிமாநாட்டின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்டமேசை கூட்டத்தில் பொறுப்பான ஏஐ குறித்த உலகளாவிய உறுதிப்பாட்டை பிரதமர் எடுத்துரைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2026 10:05PM by PIB Chennai
செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் முன்னிலை வகிக்கும் உலக பங்குதாரர்களை ஓரிடத்தில் கொண்டு வந்த ஏஐ தாக்க உச்சிமாநாட்டின் தலைமை நிர்வாக அதிகாரிகள் வட்டமேசை கூட்டத்தின் விளைவுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.
ஏஐ பொறுப்புணர்வு மீதான கவனம், உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் என இந்த விவாதங்கள், கருத்தாழம் மிகுந்தவையாகவும் தொலைநோக்குப் பார்வை கொண்டதாகவும் இருந்தன.
மனிதகுல முன்னேற்றம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு ஏஐ பயன்பாட்டுக்கு பகிரப்பட்ட உறுதியைக் காண்பது மனநிறைவாக இருந்தது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“ஏஐ தாக்க உச்சிமாநாட்டின் தலைமை நிர்வாக அதிகாரிகள் வட்டமேசை கூட்டம் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் முன்னிலை வகிக்கும் உலக பங்குதாரர்களை ஓரிடத்தில் கொண்டு வந்தது. ஏஐ பொறுப்புணர்வு மீதான கவனம், உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் என இந்த விவாதங்கள், கருத்தாழம் மிகுந்தவையாகவும் தொலைநோக்குப் பார்வை கொண்டதாகவும் இருந்தன.
மனிதகுல முன்னேற்றம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு ஏஐ பயன்பாட்டுக்கு பகிரப்பட்ட உறுதியைக் காண்பது மனநிறைவாக இருந்தது.”
***
(Release ID: 2230513)
TV/SMB/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2235081)
வருகையாளர் எண்ணிக்கை : 49
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam