சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் "புதுமை தாக்கம்" என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
17 FEB 2026 12:53PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், இந்தியா செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சிமாநாட்டில் “செயற்கை நுண்ணறிவு பொதுச் சுகாதாரத்தில் மாற்றம் ஏற்படுத்தும் சக்தி” என்ற அமர்வில் பங்கேற்றார். சுகாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்பது வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் அல்ல; அது மக்களின் வாழ்க்கையை நேரடியாக மேம்படுத்தும் கருவி என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, கிராம–நகர் வேறுபாடு, அதிக மக்கள்தொகை, பல்வேறு கிராம நகரம் நோய்கள் போன்ற சவால்களை சமாளிக்க ஏஐ முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
நோய் கண்காணிப்பு, காசநோய் கண்டறிதல், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் போன்ற பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே பயன்படுத்தப்படுகிறது. கையடக்க எக்ஸ்-ரே கருவிகள் மற்றும் கணினி உதவியுடன் கண்டறிதல் முறைகள் மூலம் காசநோயை அதிக அளவில் கண்டறிய முடிந்துள்ளது. மேலும், ஏஐ மருத்துவர்களை மாற்றுவதற்காக அல்ல; அவர்களுக்கு உதவுவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
ஏஐ பயனுள்ளதாக இருக்க வேண்டுமெனில் நல்ல தரவு, நம்பகமான ஒழுங்குமுறை மற்றும் அரசு–தனியார் இணைப்பு அவசியம் என வல்லுநர்கள் கூறினர். எதிர்காலத்தில் மருத்துவர்கள் ஏஐ பற்றிய அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால், ஏஐ இந்தியாவின் சுகாதாரத் துறையை வலுப்படுத்தும் முக்கிய கருவியாக இருக்கும் என்ற கருத்துடன் அமர்வு நிறைவடைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229046®=3&lang=1
***
AD/PKV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2229169)
வருகையாளர் எண்ணிக்கை : 11