பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கக் கண்காட்சி 2026-ஐ பிப்ரவரி 16 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 FEB 2026 2:21PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கக் கண்காட்சி 2026- 2026, பிப்ரவரி 16 அன்று மாலை 5 மணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். இது பிப்ரவரி 20 வரை நடைபெறும்.

70,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் 10 அரங்குகளில் பரந்து விரிந்துள்ள இந்தக் கண்காட்சி, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் சர்வதேசப் பங்கேற்பாளர்களை  ஒன்றிணைக்கும். செயற்கை நுண்ணறிவுச் சூழல் அமைப்பில் சர்வதேச ஒத்துழைப்பைக் காட்டும் வகையில்  ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, செர்பியா, எஸ்தோனியா, தஜிகிஸ்தான், ஆப்பிரிக்கா என 13 ஆகிய நாடுகளின் அரங்குகள் கண்காட்சியில் இடம்பெறும்.

இந்தக் கண்காட்சியில்  சர்வதேசப் பிரதிநிதிகள் உட்பட 2.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களின் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு புதிய கூட்டாண்மைகளை வளர்ப்பதையும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவுச் சூழல் அமைப்பிற்குள் வணிக வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

500-க்கும் அதிகமான அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இதில் 3250-க்கும் அதிகமான தொலைநோக்குப் பார்வை கொண்ட பேச்சாளர்கள் மற்றும் குழு விவாத உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள். பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தை ஏற்பதிலும், உலக அளவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் செயற்கை நுண்ணறிவு பயனளிப்பதை உறுதி செய்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதிலும் இந்த அமர்வுகள் கவனம் செலுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228350&reg=3&lang=1

***

TV/SMB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2228473) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam