வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியின் யஷோபூமியில் 2025-ம் ஆண்டுக்கான தேசிய நகர்ப்புற மாநாட்டை மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தொடங்கி வைத்தார்

Posted On: 08 NOV 2025 4:33PM by PIB Chennai

புதுதில்லியின் யஷோபூமியில் 2025-ம் ஆண்டுக்கான தேசிய நகர்ப்புற மாநாட்டை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை  அமைச்சர் திரு மனோகர் லால் இன்று தொடங்கி வைத்தார்.

இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில், கொள்கை வகுப்பாளர்கள், நகர்ப்புற திட்டமிடுபவர்கள், நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2500- க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஆறு கருப்பொருள் பகுதிகளில் தீவிரமான சிந்தனை அமர்வுகள் மூலம் "நிலையான நகர்ப்புற மேம்பாடு மற்றும் ஆளுகை" என்ற கருப்பொருளில் விவாதிப்பார்கள்.

இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர் 'வளர்ச்சியடைந்த பாரத நகரம் ' கண்காட்சியைத் தொடங்கி வைத்தார், இது உண்மையிலேயே வளர்ந்த, துடிப்பான, உள்ளடக்கிய, நிலையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் இந்திய நகரத்தின் தொலைநோக்குப் பார்வையை உயிர்ப்பிக்கிறது. இந்தக் கண்காட்சி இந்திய நகரங்கள் முழுவதும் செயல்படுத்தப்படும் புதுமையான நகர்ப்புற திட்டமிடல் மாதிரிகள், ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட உள்கட்டமைப்பு ஆகியவற்றைக் காட்டுகிறது.

மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், நகர்ப்புற இந்தியா முழுவதும் மீதமுள்ள குப்பைத் தொட்டிகளை விரைவாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வருட கால, தீவிர முயற்சியான குப்பைத் தொட்டி மறுசீரமைப்பு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் சமூகம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மதிப்புமிக்க நகர்ப்புற நிலங்களை மீட்டெடுக்க முயல்கிறது, இதன் மூலம் செப்டம்பர் 2026- க்குள் "லட்சிய பூஜ்ஜிய குப்பைத் தொட்டிகளை" அடைவதற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை முன்னேற்றுகிறது.

இந்த நிகழ்வில் தொடங்கப்பட்ட மற்றொரு முக்கிய முயற்சி, மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், ஹட்கோவின்  ஒரு முன்முயற்சியான யுவின் எனப்படும் நகர்ப்புற முதலீட்டு சாளரம் ஆகும். இந்திய நகரங்களுக்கான ஒரே இடத்தில் முதலீட்டு வசதி தளமாக இது செயல்படும், இது தனியார் முதலீடுகளை ஈர்க்கவும், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பலதரப்பு நிறுவனங்களிலிருந்து நீண்ட கால, சலுகை மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த நிதியுதவியை அணுகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக பொது, தனியார் கூட்டு முயற்சி அடிப்படையிலான நகர்ப்புற திட்டங்களையும் இந்த தளம் ஊக்குவிக்கும்.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், இந்தியாவின் நகர்ப்புற மாற்றம் நிலைத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் புதுமையால் இயக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்தூய்மையான, பசுமையான மற்றும் வாழக்கூடிய நகரங்களை உருவாக்குவதில் மத்திய அரசின் முன்முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். குடிமக்களின் முழுமையான வளர்ச்சியையும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதற்கு திட்டமிடப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாடு அவசியம் என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். வரும் ஆண்டுகளில், பொது-தனியார் கூட்டாண்மை ஆதரவுடன், இந்தியாவின் விரிவடையும் நகர்ப்புற உள்கட்டமைப்பு தேவைகளைப் பூர்த்தி செய்ய அர்ப்பணிப்புள்ள முதலீடுகள் தேவைப்படும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.

2047 வாக்கில், இந்திய நகர்ப்புற மக்கள் தொகை மொத்த மக்கள்தொகையில் சுமார் 50% ஆக இருக்கும் என்றும், அவர்களுக்காக, அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும், மத்திய மற்றும் மாநில அரசுகள் மட்டுமல்லாமல் , தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்தும் பெரிய முதலீடுகள் வளர்ந்த பாரத கனவை அடைய உதவும் என்றும் அவர் கூறினார்.

***

(Release ID: 2187816)

AD/PKV/RJ


(Release ID: 2187928) Visitor Counter : 3