பிரதமர் அலுவலகம்
திரு பியூஷ் பாண்டே மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
24 OCT 2025 11:29AM by PIB Chennai
விளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு உலகின் முதுபெரும் ஆளுமை திரு பியூஷ் பாண்டே மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் விளம்பர தளத்தில் திரு பாண்டேயின் அசாதாரணமான படைப்பூக்கம் மற்றும் சிறந்த பங்களிப்புகளை பிரதமர் தனது இதயப்பூர்வமான அஞ்சலி செய்தியில் நினைவுகூர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“திரு பியூஷ் பாண்டே அவர்கள் தமது படைப்பூக்கத்தால் மெச்சப்பட்டவர். விளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு உலகிற்கு சிறந்த பங்களிப்புகளை அவர் செய்துள்ளார். பல ஆண்டு கால எங்களின் கலந்துரையாடல்களை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். அவரது மறைவால் நான் வருத்தமடைந்தேன். எனது நினைவுகள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது படைப்புகளை ரசித்தோருடன் உள்ளன. ஓம் சாந்தி.”
***
(Release ID: 2182028)
SS/SMB/AG/RJ
(Release ID: 2182076)
Visitor Counter : 11
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam